Home இந்தியா ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் இந்தியாவின் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு

ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் இந்தியாவின் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு

3
0

ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் மிகப்பெரிய தங்க சுரங்கம் ஒன்றானது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது இந்தியாவின் தங்க தேவைகள் 25 விழுக்காட்டை நிவர்த்தி செய்யும் என்றும் தற்போது எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் உள்ள கண்கரியா என்ற பகுதியில் மிகப்பெரிய தங்க சுரங்கம் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த கண்டுபிடிப்பு இந்தியாவிற்கு ஒரு திருப்பு முனையாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள ஜக்புரா மற்றும் புகியா ஆகிய இடங்களில் தங்க சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தங்க நகை ஆர்வலர் இடையே தற்போது இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கக்கூடிய கண்கரியா சுரங்கத்தில் சுமார் 3 கிலோமீட்டர் நீளத்திற்கு 110 மில்லியன் டன்களுக்கும் அதிகமான தாதுக்கள் இருக்கலாம் என்று தற்போது மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் 222 டன் தூய தங்கம் அடங்கும் என்றும் கூறப்படுகிறது.

ராஜஸ்தானில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கங்களில் இதுவே அதிக தங்கம் கொண்ட சுரங்கமாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது இந்த கண்டுபிடிப்பால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும், இந்தியாவின் தங்க தேவைகள் 25 விழுக்காட்டை இந்த சுரங்கமானது பூர்த்தி செய்யும் என்றும் தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here