
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால் ரூ.125 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நாளை நடைபெறுகிறது. இதில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதில்லை. நாளைய போட்டியில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.





