
முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை சென்னை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்தனர். திருப்போரூரை சேர்ந்த ஐயப்பன் என்ற நபர் மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக போலீசார் கூறினர். ஏற்கனவே இவர் 2020 ஆம் ஆண்டு கோயம்பேடு பேருந்து நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம் 2021 ஆம் ஆண்டு முதலமைச்சருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




