
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு நிர்வாக அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.
முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு இலவசமாக உணவளிக்கும் திட்டம் வகுக்கப்பட்டது.தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கும் திட்டத்திற்கு 186 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த திட்டத்திற்கு 186 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கு. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களின் நலனுக்காக ஆறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதில் மிக முக்கியமாக நகர்ப்புறங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த மாநகராட்சிகளின் மூலம் வழங்கப்படும் என்றும், இத்திட்டம் முதலில் சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக மற்ற மாநகராட்சியில் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்த வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சியில் தினசரி 29,455 தூய்மை பணியாளர்களுக்கு உணவானது வழங்கப்படுகிறது.
நிரந்தர தூய்மை பணியாளர்கள் தொடங்கி அனைத்து துணைகளும் பூங்கா உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பணியாற்றும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் மொத்தம் 2945 தூய்மை பணியாளர்களுக்கு இந்த காலை உணவானது வழங்கப்படுகிறது.
இந்த தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்குவதற்காக மூன்று ஆண்டுக்கு 186 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசானது இந்த அரசாணை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த தூய்மை பணியாளருக்கு உணவு வழங்குவதற்கான அந்த கேப்டரிங் அந்த உணவு சமைக்கும் நிறுவனத்தை தேர்வு செய்யப்பட்டு விரைவில் தூய்மை பணியாளருக்கான காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




