Home தமிழகம் “தீபாவளி விடுமுறைக்கு கூடுதல் நாள் சேருமா? – அரசு முடிவை எதிர்நோக்கும் பொதுமக்கள்”

“தீபாவளி விடுமுறைக்கு கூடுதல் நாள் சேருமா? – அரசு முடிவை எதிர்நோக்கும் பொதுமக்கள்”

1
0

தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி திங்கற்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இதற்கு முந்தைய நாட்களான அக்டோபர் 18 மற்றும் 19 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் என்பதால் பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை உறுதியாகி உள்ளது.

வேலை நிமித்தமாக வெளியூர்களில் வசிப்போர் இந்த மூன்று நாட்கள் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகை கொண்டாட திட்டமிட்டிருப்பார்கள். பண்டிகை முடிந்த மறுநாளான அக்டோபர் 21 செவ்வாய்க்கிழமை வேலை நாளாக உள்ளது. சொந்த ஊரில் பண்டிகை கொண்டாடிவிட்டு பண்டிகை அன்று உடனடியாக அடுத்த நாள் பணிக்கு திரும்புவது வெளியூரில் வசிப்போருக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.

பயண கலைப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் போன்ற காரணங்களால் பண்டிகைக்கு அடுத்த நாளையும் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்பதே பொதுமக்களை நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. சமீப ஆண்டுகளாக பொதுமக்களின் இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டும் அக்டோபர் 21 செவ்வாய்க்கிழமையை விடுமுறையாக அறிவித்து தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறையை உறுதி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பள்ளி கல்வித்துறையின் ஆண்டு நாட்களின் படி இந்த கல்வி ஆண்டில் மொத்தம் 210 வேளை நாட்கள் திட்டமிடப்படு இருக்கின்றன. இருப்பினும் பண்டிகை காலங்கள் மற்றும் கனமழை போன்ற அசாதாரண சூழல்களில் கூடுதல் விடுமுறை அளிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது.

அதே சமயம் செவ்வாய்க்கிழமை விடுமுறையாக அறிவிக்கப்பட்டால் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஒரு நீண்ட ஓய்வையும் பண்டிகை முழுமையாக கொண்டாட முடியும். வரும் நாட்களில் தான் தெரியும் அரசு என்ன முடிவெடுக்கும் என்று

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here