Home தொழில்நுட்பம் “AI யுகத்தில் வெற்றி பெறப் போவது யார் தெரியுமா?

“AI யுகத்தில் வெற்றி பெறப் போவது யார் தெரியுமா?

2
0

ஏஐ வந்துவிட்டது; நம்ம வேலை போய்விடுமோ என்ற பயம் தான் இப்போது பல இளைஞர்களின் மனதில் மிகப் பெரிய அச்சமாக இருக்கிறது. இந்த பயத்தை இன்னும் அதிகப்படுத்தும் வகையில், உலகின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான காக்னிசன்ட் (Cognizant) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) ரவிகுமார் சமீபத்தில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில், யாரும் எதிர்பார்க்காத ஒரு தரப்புக்கு பெரிய ‘ஜாக்பாட்’ காத்திருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார். முதலில் அதிர்ச்சியான செய்தியைப் பார்ப்போம்.

ரவிகுமார் கூறியதாவது, ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பல ஆரம்ப நிலை (Entry-level) வேலைகள் இனி நிலைத்திருக்காது. குறிப்பாக, மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான பணிகளைச் செய்யும் வேலைகள் — உதாரணத்திற்கு டேட்டா என்ட்ரி, எளிய கோடிங், சாப்ட்வேர் டெஸ்டிங் போன்றவை — இனிமேல் மனிதர்களுக்குப் பதிலாக ஏஐயால் செய்யப்படும்.

இது ஐடி துறையில் வேலை பெறும் கனவு கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நிச்சயமாக அதிர்ச்சியான செய்திதான். ஆனால் இங்குதான் ஒரு பெரிய திருப்பம் உள்ளது.

ரவிகுமார் கூறுவதாவது, ஏஐ சில வேலைகளை அழித்தாலும், அதற்குப் பதிலாக பல புதிய மற்றும் சுவாரஸ்யமான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். அதில் முக்கியமான ஒன்று “ஏஐ விஸ்பரர்” அல்லது “ப்ராம்ப்ட் இன்ஜினியர்” என்ற புதிய தொழில்.

சாதாரணமாகச் சொன்னால், ஏஐயிடம் எப்படி சரியாகவும், திறமையாகவும் கேள்வி கேட்டு, நமக்கு தேவையான பதிலைப் பெறுவது என்பதே இந்த வேலைக்கான முக்கியப் பணி.

அப்படியெனில், இந்த வேலையைச் செய்ய யார் பொருத்தமானவர்கள்? கணினி அறிவியல் (Computer Science) படித்தவர்களா? ரவிகுமார் சொல்வது நம்மை ஆச்சரியப்பட வைக்கும்.

இந்த புதிய தொழிலுக்கு வரலாறு, தத்துவம், இலக்கியம், கலை போன்ற “லிபரல் ஆர்ட்ஸ்” துறையில் படித்தவர்கள்தான் மிகவும் பொருத்தமானவர்கள் என அவர் கூறுகிறார். காரணம், இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு ஒரு கேள்விக்கான நேரடியான, தர்க்க ரீதியான பதிலைத் தேட தெரியும்.

ஆனால் லிபரல் ஆர்ட்ஸ் துறையினருக்கு ஒரு விஷயத்தை பல கோணங்களில் பார்க்கவும், ஆழமாகவும் நுணுக்கமாகவும் கேள்வி கேட்கவும் தெரியும். மேலும் மனித உணர்வுகளைப் புரிந்து உரையாடும் திறமையும் அவர்களிடம் இருக்கும்.

ஏஐயிடமிருந்து சிறந்த பதிலைப் பெற இந்த திறமைகள்தான் மிகவும் முக்கியமானவை.

அதனால், எதிர்காலத்தில் கோடிங் மட்டும் தெரிந்தால் போதாது. ஏஐயுடன் எப்படி உரையாடுவது, எப்படி அதிலிருந்து வேலை வாங்குவது என்பதைக் கற்றவர்களுக்குத்தான் மிகப்பெரிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

காக்னிசன்ட் நிறுவனம் தங்களது ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு இப்போது இதே வகையான பயிற்சிகளை வழங்கி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here