
ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைப்பகுதியில் நேற்று அதிகாலை 6.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் 320-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மஸாரி ஷரீப் நகரம் அருகே மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மற்றும் ஈரானின் மஷ்ஹத் நகரம் வரையிலும் உணரப்பட்டன.
கடந்த மாதங்களில் இந்த பகுதியில் ஏற்பட்ட குறைந்த ரிக்டர் அளவிலான அதிர்வுகளின் உச்சமாக இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.






