
உங்கள் குழந்தைகள் எவ்வளவு நேரம் Facebook ,டிக்டாக், ஸ்னாப்சாட்டில் செலவழிக்கிறார்கள். ஜாக்கிரதை இந்த சமூக ஊடகங்கள் நம் இளைஞர்களின் மனநிலையை பாழாக்குவதாக கூறி நியூயார்க் நகரமே இந்த நிறுவனங்கள் மீது ஒரு பிரம்மாண்டமான வழக்கை தொடுத்துள்ளது.
நியூயார்க் நகரம் மெட்டா ,கூகுள், பைட் டான்ஸ் போன்ற டெக் நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டி உள்ளது. நீங்கள் உங்கள் லாபத்திற்காக இளைஞர்களை வேண்டுமென்றே உங்கள் செயலிகளுக்குள் அடிமையாக்குகிறீர்கள். இதனால் எங்கள் குழந்தைகள் மனநிலை நெருக்கடிக்கு ஆளாகிறார்கள் என்பதுதான் அவர்களின் குற்றச்சாட்டு.
இந்த வழக்கில் சொல்லப்பட்டுள்ள சில பகிர் உண்மைகளை பாருங்கள். நியூயார்க்கில் 77% உயர்நிலை பள்ளி மாணவர்கள் ஒரு நாளிற்கு மூன்று மணி நேரத்திற்கு மேலாக ஸ்கிரீன் முன்புதான் செல்ல வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு தூக்கம்மின்மை பள்ளிக்கு செல்ல பிடிக்காமல் போவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இதற்காக நியூயார்க் நகரம் மக்களின் வரிபணத்தில் கோடிக்கணக்கில் செலவு செய்ய வேண்டியுள்ளது. இது மட்டுமல்லாமல் சப்வே ,சர்பிங் போன்ற ஆபத்தான சாகசங்கள் அதிகரித்து பல இளைஞர்கள் உயிரிழப்பதற்கும் இந்த சமூக ஊடகங்கள் தான் காரணம் என்று நியூயார்க் நகரம் குற்றம் சாட்டுகிறது.
சமூக ஊடகங்களை ஒரு பொது சுகாதார அபாயம் என்று நியூயார்க் அறிவித்துள்ளது. இந்த வழக்கில் நியூயார்க் நகரம் கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு கோரியுள்ளது. இந்த வழக்கு உலகெங்கும் உள்ள அரசுகளுக்கு ஒரு முன் உதாரணமாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.






