Home உலகம் நடுக்கடலில் அதிரடி! நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியது

நடுக்கடலில் அதிரடி! நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியது

2
0

அமெரிக்காவை ஒட்டியுள்ள கரீபியன் தீவுகளுக்கு அருகே கடலில் திடீரென ஒரு நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து சிதறியதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது அமெரிக்கா முழுவதும் கவனத்தை ஈர்த்ததோடு, உலக நாடுகளின் கவனத்தையும் பெற்றுள்ளது.

அந்த நீர்மூழ்கிக் கப்பல் வெடித்த காட்சிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதேபோல், வெள்ளை மாளிகையும் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க கடற்படை தெரிவித்ததாவது, அந்த நீர்மூழ்கிக் கப்பல் கடலில் வேகமாக சென்றுகொண்டிருந்தபோது அதை துல்லியமாக கண்டறிந்து தாக்கி அழித்துள்ளனர். காரணம் — அந்த கப்பலில் பல ஆயிரம் டன் அளவில் போதைப் பொருட்கள், குறிப்பாக ஹெராயின் போன்ற மிக விலையுயர்ந்த பொருட்கள் கடத்தப்பட்டு கொண்டிருந்தன என்பது.

உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், FBI மற்றும் அமெரிக்க கடற்படை இணைந்து நடத்திய சிறப்பு ஆபரேஷனில் அந்த நீர்மூழ்கி கப்பல் முற்றிலும் அழிக்கப்பட்டது. அதில் இருந்த நால்வரில் இருவர் உயிரிழந்தனர்; மற்ற இருவர் — ஒருவர் ஈக்வடார் நாட்டைச் சேர்ந்தவர், மற்றொருவர் கொலம்பியாவைச் சேர்ந்தவர் — தப்பியோடி கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தங்கள் நாடுகளுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

“இந்த நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்காவுக்குள் நுழைந்திருந்தால் குறைந்தது 25,000 அமெரிக்கர்களின் உயிர்கள் போயிருக்கும். அவர்களின் வாழ்க்கையை காப்பாற்ற இந்த நடவடிக்கைக்கு நான் உத்தரவிட்டேன்,” என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, கடந்த மூன்று மாதங்களில் பல ஸ்பீட்போட் வழியாக போதைப் பொருட்கள் கடத்தப்பட்டிருந்தாலும், இது தான் முதல் முறை நீர்மூழ்கிக் கப்பல் வழியாக இவ்வளவு பெரிய அளவில் கடத்தல் முயற்சி செய்யப்பட்டதாகும்.

அமெரிக்கா தெரிவித்ததாவது, தென் அமெரிக்க நாடுகள், குறிப்பாக கொலம்பியா மற்றும் வெனிசுலா வழியாக போதைப் பொருட்கள் வட அமெரிக்காவுக்கு கடத்தப்படுவது நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இதை முற்றிலும் ஒழிக்க “இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்கா வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. அவரின் தலையை பிடித்து வருபவர்களுக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நீர்மூழ்கிக் கப்பல் சம்பவத்துக்கும் வெனிசுலாவுக்கும் தொடர்பு உள்ளதா என்பதைப் பற்றிய விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

இவ்வாறு நடுக்கடலில் போதைப் பொருள் நிரம்பிய நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்க கடற்படை தாக்கி அழித்திருப்பது, உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here