குட் பேட் அக்லி படத்தில் தன்னுடைய பாடலை பயன்படுத்தியதற்காக இசையமைப்பாளர் இளையராஜா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.
குட் பேட் அக்லி படத்தில் அனுமதி பெறாமல் தன்னுடைய பாடல்களை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று இளையராஜா தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டி இருக்கிறார்.
மைத்ரி மூவி மேக்கிரிட்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிப்புல குட் பேட் அக்லி என்கிற திரைப்படம் வந்து கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது.
இந்த திரைப்படத்தில்தான் இளமை இதோ இதோ, ஒத்தரு பயம் தாரேன், என் ஜோடி மஞ்சள் குருவி ஆகிய பாடல்களை வந்து அனுமதி இல்லாமல் பயன்படுத்ததாக கூறிதான் இசையமைப்பாளர் இளையராஜா சார்புல அவரது வழக்கறிஞர்கள் கே. தியாகராஜன் எஸ். சரவணன் ஆகியோர் வந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள்.
அந்த மனுவில் அனுமதி இல்லாமல் பயன்படுத்திய பாடல்களை படத்திலிருந்து நீக்கவும் 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரியும் மன்னிப்பு நோட்டீஸ்க்கு பதிலளித்த அந்த தயாரிப்பு நிறுவனம் வந்து சட்டப்பூர்வமான உரிமையாளரிடமிருந்து அந்த பாடல்களை பயன்படுத்த அனுமதி பெற்றதாக கூறியுள்ளதாகவும், ஆனால் அந்த உரிமையாளர் யார் என்பதை தெரிவிக்கவில்லை என்பதும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தனது அனுமதி இல்லாமல் பாடல்களை பயன்படுத்தியது, பதிப்புரிமை செய்தது சட்டத்து விரோதமானது அது தன்னுடைய இசை படைப்பு என்பதனால் படத்தில் அந்த பாடல்களை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் மேலும் சட்ட விரோதமாக பயன்படுத்ததற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவிலே கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்த வழக்குதான் வருகிற திங்கட்கிழமை நீதிபதி செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வரவிருக்கிறது.








