Home தமிழகம் ”தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு”!

”தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு”!

நியோமேக்ஸ் நிறுவன மோசடி வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்க தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

நியோ மேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் புகார் அளிக்க அக்டோபர் எட்டாம் தேதி வரை இறுதி வாய்ப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் எட்டாம் தேதிக்குள் புகார் அளித்தால் இழந்த தொகை அனைத்தும் பெற்று தரப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நியோ மேக்ஸ் நிறுவனத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

மதுரையை மையமாக கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் முதலீட்டுக்கு கூடுதல் வட்டி இரட்டிப்பு பணம் வழங்குவதாக கூறி தமிழ்நாடு முழுவதும் முதலீட்டார்களை சேர்த்தார்கள்.

பணத்தை திருப்பி தராமல் முதலீட்டார்களை ஏமாற்றி கோடிக்கணக்கான பணம் மோசடி செய்ததாக நிறுவனங்களுக்கு எதிராக மதுரை திருச்சி பொருளாதார குற்றத்தை போலீசார் வழக்கு பதிவு செய்தார்கள்.

இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கில் அரசு சார்பாக ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனைப்பர நியோமக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்களை மதிப்பு விவரங்கள் தாக்கல் செய்தார்கள்

இந்த வழக்கில பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நிவாரணம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில உத்தரவாதம் அளித்தார்கள்.

இதை அடுத்து அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு பாராட்டை தெரிவித்த நீதிபதி இந்த வழக்கில் தொழில் நுட்பத்தை பயன்படுத்தினால் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் அளிப்பது எளிமையாக இருக்கும் என்று தெரிவித்தார்கள்.

மேலும் நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் உரிய ஆவணங்களுடன் அக்டோபர் எட்டாம் தேதிக்குள் நேரிலே அல்லது மின்னஞ்சல் வாயிலாக புகார் அளிக்கலாம் எனவும் நீதிபதி தெரிவித்தார்கள் .

இந்த வழக்கு அக்டோபர் எட்டாம் தேதிக்கு புகார் அளிப்பவர்களுக்கு மட்டுமே இழந்த தொகை பெற்று தரப்படும் என்று கூறிய நீதிபதி வழக்கு செப்டம்பர் 22ஆம் தேதி என்று தெரிவித்தார்.