அமெரிக்காவில் அதிபர் டோனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசின் சமீபத்திய கருத்துக்கள் இந்தியாவிற்கு எதிராக திரும்பி வருவதாக கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு குறித்த நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகளும் உயர்ந்த பொறுப்புகளும் வழங்கப்படக்கூடாது என்று கருத்து தெரிவித்தார்.
ஆனால் அதே நிகழ்ச்சியில் google, மெட்டா, மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி டெக் நிறுவனங்களின் தலைவர்கள் பெரும்பாலும் இந்தியர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிகழ்வில் பங்கேற்ற பிரதான அதிகாரிகளில் சுமார் 70% பேர் இந்தியர்கள்தான்.
இந்நிலையில் உலகளலாவிய தொழில்நுட்ப துறையில் இந்தியர்களும் தமிழர்களும் முன்னிலை வகித்தாலும் நமது அன்றாட டிஜிட்டல் பயன்பாடுகள் பெரும்பாலும் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் தயாரிக்கப்பட்டவையை என்பதும் உண்மை.
எனவே மேட் இன் இந்தியா நோக்கில் நாமே நமக்கு தேவையான செயலிகள் மற்றும் மென்பொருட்களை உருவாக்கும் , தன்னிறைவு அடைய வேண்டும் என்பதே முக்கிய குறிக்கோளாக உள்ளது. இந்த நோக்கத்துக்கு சான்றாக சென்னையை தலைமையிடமாக கொண்ட ஜோஹோ நிறுவனம் 2021 ஆம் ஆண்டு அமெரிக்க what’s app-க்கு மாற்றாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட அரட்டை செயலியை
அறிமுகப்படுத்தியது.
ஆரம்ப கட்டத்தில் இருந்த சின்ன சிக்கல்கள் சரி செய்யப்பட்டு தற்போது முன்னணி மெசேஜிங் ஆப்களுக்கு போட்டிய அளிக்கும் அளவிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் அப், சினப்சாட் போன்றவற்றில் காணப்படும் அனைத்து வசதிகளும் அரட்டையில் உள்ளன. எளிய யுஐ பாதுகாப்பான தகவல் பரிமாற்றம் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும்.
சமீபத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்தியர்கள் உள்ளூர் டிஜிட்டல் தளங்களை ஆதரிக்க வேண்டும் என்றும் குறிப்பாக அரட்டை செயலியை பயன்படுத்துமாறு அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து சில நாட்களிலேயே 35 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்ததால் இந்த இந்திய ஆப் ஸ்டோரில் வாட்ஸ் அப்பை பிண்ணுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது.








