Home தமிழகம் “அலைக்கடலாய் திரளும் தொண்டர்கள்… கரூரில் நாளை திமுக முப்பெரும் விழா

“அலைக்கடலாய் திரளும் தொண்டர்கள்… கரூரில் நாளை திமுக முப்பெரும் விழா

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாள். தமிழ் தாயின் தலைமகன் பேரறிஞர் பெருந்தகை அண்ணா பிறந்த நாள். பெரியாரின் லட்சியங்களை வென்றெடுத்திட பேரறிஞர் அண்ணாவால் திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்ட நாள்.

இந்த மூன்றும் நிகழ்ந்தது செப்டம்பர் மாதம் என்பதால் முப்பெரும் விழாவாக உடன்பிறப்புகளின் திருவிழாவாக திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு திமுக முப்பெரும் விழா நாளை நடைபெறுகிறது.

கரூர் மாநகரின் புறவழிச்சாலையில் கோடங்கிப்பட்டி என்னும் இடத்தில் முப்பெரும் விழா எனும் கொள்கை திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த லட்சிய விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரது பெயரிலான விருதுகளை வழங்கி திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.

பெரியார் விருது திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான கனிமொழிக்கு வழங்கப்படுகிறது. அண்ணா விருது மூத்த முன்னோடி சுப சீதாராமனுக்கும் கலைஞர் விருது திமுகவின் 100 வயது தொண்டர் சோமா ராமச்சந்திரனுக்கும் வழங்கப்படுகிறது.

பாவேந்தர் பாரதிதாசன் விருது மூத்த முன்னோடி குளித்தலை சிவராமனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் விருது திமுக ஆதி திராவிடர் நலக்குழு தலைவர் மருதூர் ராமலிங்கத்திற்கும் மு.க ஸ்டாலின் விருது ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலாளர் பொங்கலூர் நா பழனிசாமிக்கும் வழங்கப்படுகிறது.

முரசொலி அறக்கட்டளை சார்பில் முரசொலி செல்வம் பெயரிலான முதல் விருது மூத்த பத்திரிகையாளர் எஸ் பன்னீர் செல்வனுக்கு வழங்கப்படுகிறது. முப்பெரும் விழா நிகழ்வுகளில் முத்தாய்ப்பாக தமிழ்நாட்டின் நான்கு மண்டலங்களில் ஒன்றியம் ,நகரம், பகுதி, பேரூர் ஆகியவற்றில் கட்சிப்பணியை சிறப்பாக செய்து வருபவர்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் நற்சான்றுதழும் பணமுடிப்பும் வழங்கப்பட உள்ளது.

திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் முப்பெரும் விழாவுக்கு தலைமை தாங்குகிறார். திமுக பொருளாளரும் மக்களவை திமுக குழு தலைவருமானார் டி.ஆர் பாலு முதன்மை செயலாளர் அமைச்சர் கே என் நேரு துணை பொதுச் செயலாளர்கள் இ .பெரியசாமி, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ், ஆராசா, திருச்சி சிவா ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

கரூர் மாவட்ட செயலாளர் செந்தல் பாலாஜி வரவேற்புரையாற்றுகிறார். லட்சிய வீரர்களாக 2026 தேர்தல் களத்தில் வெற்றிவாகை சூடுவதற்கான முன்னோட்ட அணிவகுப்புதான் இந்த முப்பெரும் விழா என்றும் கரூரில் நாளை நடைபெறவிருக்கும் முப்பெரும் விழாவில் அலைக்கடல் எனஆர்ப்பரித்து பங்கேற்றிடுமாறும் திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.