மதுரையில் நடைபெற உள்ள தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு விருதுநகர் மாவட்டம் இனாம் கரிசல் குளம் பகுதியில் வரவேற்பு பேனர் வைத்தபோது கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கிறார்.
தமிழக வெற்றி கழகத்தினுடைய இரண்டாவது மாநாடு நாளை மதுரையில் விமர்சியாக நடைபெற உள்ளது.
இதற்காக தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் மாநாட்டை வரவேற்கும் விதமாக பேனர்கள் போஸ்டர்கள் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் திருவளுத்தூர் அருகே உள்ள இனாம் கரிசல் குளம் பகுதியைச் சேர்ந்த செல்லக்கன்னி என்பவரது மகன் காளீஸ்வரன் பிரதான சாலை அதாவது திருவளுத்தூர் இருந்து மதுரையில் செல்லும் பிரதான சாலை பகுதியில் தமிழக வெற்றி மாநாட்டு வரவேற்கும் விதமாக பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அருகில் இருந்த கம்பியை எடுக்கும் போது மேல் பகுதியில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்து காயமடைந்தார்.
உடனே அங்கு கூட இருந்த அனைவரும் மீட்டு உடனடியாக சிறுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அவரை சேர்த்தனர் மருத்துவர் பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தார்.
இறந்த கல்லூரி மாணவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும் தெரிய வருகிறது. தற்போது அந்த இடத்தில் அனுமதி வாங்கி பேனர் வைத்தார்களா இல்லையா மேலும் எவ்வாறு இறந்தார் என்று காவல் துறையினர் அந்த பகுதியில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்லூரி மாணவர் அதாவது தமிழ வெற்றி கழக மாநாட்டிற்காக பேனர் வைக்கும் இடத்தில் மின்சாரம் தாக்கிக்கி உயிரந்த சம்பவத்தால் அந்த பகுதியில்
பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இனாம் கரிசல் குளம் பகுதியில் இந்த கல்லூரி மாணவன் இறந்த சம்பவத்தால் அவர் குடும்பத்தார் மட்டுமல்ல அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.
தற்போது காவல் துறையினர் இந்த மாணவன் கல்லூரி நடக்கின்ற நேரத்தில் எவ்வாறு விடுமுறை செய்து இந்த இடத்திற்கு வந்து அந்த பேனர் வைக்க வந்தார் என்று மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
அதாவது இந்த கட்டவுட் கட்டுவதற்காகவும் பேஸ்டர் ஒட்டுவதற்காகவும் உடன் இருந்த மற்ற நம்பருடன் சேர்ந்து இவருடன் விசாரணையை காவல் துறையினர் துரிவுப்படுத்தி தற்போது விசாரணை செய்து வருகின்றனர்.








