ஆண்டிப்பட்டி அருகே சிமெண்ட் தூண் விழுந்து நான்கு வயது சிறுமி பலி சண்முகசுந்தரபுரத்தில் வீட்டின் முன்பாக விளையாடி கொண்டிருந்த சிறுமி மீது சிமெண்ட் தூண் விழுந்து பலி.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சண்முகசுந்தரம் கிராமத்தில் கிழக்கு தெரு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி தம்பதியான கோபாலகிருஷ்ணன் அன்னலட்சுமி இவர்களுக்கு நான்கு வயதில் அஜிதா ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் கூலி வேலைக்கு சென்றிருந்த போது வீட்டு அருகே உள்ள கோபாலகிருஷ்ணனின் உறவினர்களான வேலுசாமி என்பவர் இடத்தில் ஆட்டுக்கொட்டகை அமைப்பதற்காக இரண்டு கல் துண்கள் அமைக்கப்பட்டு அது நடுவே கயிறு போட்டு போர்வை உணர வைக்கப்பட்டிருந்த நிலையில், அதை இழுத்து விளையாடி கொண்டிருந்த சிறுமி அஜிதா ஸ்ரீ மீது திடீரென சிமெண்ட் தூண் உடைந்து விழுந்து,தலை மூக்கு உள்ளிட்ட பகுதியில் படுகாயம் ஏற்பட்டு அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிறுமி சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார்.
வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த நான்கு வயது சிறுமி சிமெண்ட் கல் உடைந்து விழுந்து படுகாயம் அடைந்து உயிர்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.








