வங்கியில் காசோலை டெபாசிட் செய்த சில மணி நேரத்தில் உரியவருடைய கணக்குல பணம் வரவு வைக்கறதுக்கான புதிய நடைமுறை. அதாவது அக்டோபர் 4 ஆம் தேதி முதல் அமலுக்கு வரதா ஆர்பிஐ அறிவிச்சிருக்காங்க.
இதனால தற்போது காசோலை பரிவர்த்தனைக்கு இரண்டு நாட்கள் வரை ஆகிற நிலையில் இனி சில மணி நேரத்தில் பணம் வரவு வைக்கப்படும் அப்படின்னு சொல்லப்பட்டிருக்கு. இது குறித்து ஆர்.பி.ஐ அறிவிப்பில் தற்போது சி.டி.எஸ் எனப்படும் காசோலைக்கு ஒப்புதல் அளிக்கும் முறையில் பேட் அடிப்படையில ஒப்புதல் அளிக்கப்படுது.
இனி அவை தொடர்ச்சியான உடனடியாக அமலுக்கு வரும் வகையில
ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதா தெரிவிச்சிருக்காங்க. காசோலை அடிப்படையிலான பரிவர்த்தனையை மேம்படுத்துவதோடு தேவையற்ற தாமதத்தை குறைத்து வாடிக்கையாளர் சேவையை துரிதப்படுத்தும் நடவடிக்கையா?
புதிய நடைமுறை வரும் அக்டோபர் 4 ஆம் தேதி மற்றும் 2026 ஜனவரி 3 ஆம் தேதி என இரண்டு கட்டமா அமலுக்கு வரதா இருக்கிறதா அறிவிக்கப்பட்டிருக்கு. உதாரணமா காலை 10 மணி முதல் 11 மணி வரை பெறப்படும் காசோலை. பிற்பகல் 2.00மணிக்குள்ள உறுதி செய்யணும். உறுதி செய்யப்படாவிட்டால் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள்ள தன்னிச்சையா ஒப்புதல் அளிக்கப்பட்டு பணம் வரவு வைக்கப்படும்.
பரிவர்த்தனை முடிந்த பின்னர் காசோலை பெற்றுக்கொண்ட வங்கி. வாடிக்கையாளர் கணக்குல ஒரு மணி நேரத்திற்குள்ள பணத்தை வரவு வைக்க வேண்டும். 1980 ஆம் ஆண்டுகளில் வங்கிகளில் காசுசோலையை செலுத்தினார். அதை பரிசீலிக்க குறைந்தபட்சம் ஒரு வார காலமாகும். அதன் பின்பு அது மூன்று நாட்களாக குறைந்தது. 2008 ஆம் ஆண்டு முதல் ஒரு நாளாக குறைந்தது. தற்போது அது ஒரு மணி நேரமாக குறைக்கப்பட்டிருக்கு.
இதனால பயனாளிகளின் வங்கி கணக்கு உடனடியாக பணம் வரவு வைக்கப்படும். நாட்டின் பொருளாதாரமும் வேகமாக வளர்ச்சி அடையும் அப்படின்னு ரிசர்வ் வங்கி தரப்பில் சொல்லப்படுகிறது.








