Home இந்தியா தபால் நிலைய MIS திட்டம்: ஒருமுறை முதலீடு, மாதந்தோறும் நிரந்தர வருமானம்!

தபால் நிலைய MIS திட்டம்: ஒருமுறை முதலீடு, மாதந்தோறும் நிரந்தர வருமானம்!

தபால் நிலையத்தின் MIS (Monthly Income Scheme) திட்டத்தில், ஒருமுறை பணத்தை முதலீடு செய்வதன் மூலம், ஒவ்வொரு மாதமும் வட்டி தொகையை மட்டும் வருமானமாக பெறலாம்.

மத்திய அரசு வழங்கும் இந்த திட்டத்தில், உங்கள் முதலீட்டிற்கு 100% பாதுகாப்பு உள்ளது. இந்த திட்டத்தின் வட்டி விகிதம் தற்போது ஆண்டுக்கு 7.40% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக 9 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

கூட்டு கணக்கு தொடங்கினால், அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இதில் மூன்று நபர்கள் வரை சேரலாம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

இந்த திட்டத்தில் கணக்கு தொடங்க 18 வயது பூர்த்தி செய்த எவரும் தகுதியுடையவர்கள்.

இந்த திட்டத்தில் மாதம் ₹5,500 வருமானம் பெற, அதிகபட்ச முதலீடு தொகையை செலுத்த வேண்டும்.

நீங்கள் தனிநபர் கணக்கை தொடங்கி அதில் 9 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 7.40% வட்டி விகிதத்தின் அடிப்படையில், மாதம் ₹5,550 வட்டியாக கிடைக்கும்.

அதேபோல், கூட்டு கணக்கில் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் ₹9,750 வரை வருமானம் பெற முடியும்.

இந்த திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் பணத்தை எடுத்தால், சில அபராத கட்டணங்கள் வசூலிக்கப்படும்.

அதாவது, 1 ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் பணத்தை எடுத்தால், உங்கள் அசல் தொகையில் 2% கழிக்கப்படும்.
3 ஆண்டிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் பணத்தை எடுத்தால், உங்கள் அசல் தொகையில் 1% கழிக்கப்படும்.

கணக்கு தொடங்கி ஒரு ஆண்டு முடிவதற்கு முன் பணத்தை எடுக்க முடியாது.

உங்கள் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று, விண்ணப்பப் படிவம் மற்றும் KYC ஆவணங்கள் (ஆதார், பேன், புகைப்படம்) சமர்ப்பித்து, குறைந்தபட்சம் ₹1,000 முதலீட்டில் இந்த கணக்கை தொடங்கலாம்.

இந்த திட்டம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகி விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.