Home இந்தியா “PF ஆபீஸ் தேடித் திரிய வேண்டாம்… ATM-லே பணம் எடுக்கலாம்”

“PF ஆபீஸ் தேடித் திரிய வேண்டாம்… ATM-லே பணம் எடுக்கலாம்”

பி.எஃப் பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி அடுத்த மாதம் அறிமுகமாக உள்ளது. வங்கி பரிவர்த்தனைகள் மேற்கொள்வது போல் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பல்வேறு மாற்றங்களை ஒன்றிய தொழிலாளர் நலத்துறை எடுத்து வருகிறது.

புதிய மாற்றத்தின் மூலம் பணத்தை எடுப்பதற்கு வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. அதற்கு பதிலாக உறுப்பினர்கள் வைப்பு நிதியை வங்கிகளில் எடுப்பது போல தங்களின் UAN எண்ணை ப பயன்படுத்தி ஏடிஎம்களில் எடுக்கலாம். இந்த வசதி அடுத்த மாதத்திலிருந்து அமல்படுத்தப்பட உள்ளது.

தற்போது வைப்பு நிதியில்லிருந்து உறுப்பினர் தனது பணத்தை எடுக்க நீண்ட நடைமுறை செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் புதிய மாற்றத்தின் மூலம் பணம் எடுக்கும் வசதி எளிமையாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.