டிட்வா புயல் காரணமாக சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் விமான சேவை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. டிட்வா புயலால் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. மேலும் தூத்துக்குடி விமான நிலையம் அமைந்துள்ள வாகைக்குளம் பகுதியிலும் கனமழை பெய்து வருவதால் விமான நிலைய ஓடு பாதையில் மழைநீர் தேங்கி உள்ளது.
மேலும் மோசமான வானிலை நிலவி வருவதால் சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் விமான சேவை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது.








