Home உலகம் கிரீன்லாந்த் அமெரிக்காவுடன் இணைப்பு: சர்வதேச பரபரப்பு!

கிரீன்லாந்த் அமெரிக்காவுடன் இணைப்பு: சர்வதேச பரபரப்பு!

கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் பரப்பளவுக்கு இணையாக ஆர்டிக் பகுதிகள் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய தீவு கிரீன்லாந்த்.

இது டென்மார்க் நாட்டின் கீழ் தன்னாட்சி பிராந்தியமாக உள்ளது. கிரீன்லாந்தை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் தற்போது ரஷ்ய, சீனக் கப்பல்கள் நெருங்கி உள்ளதாகவும், அதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவுடன் கிரீன்லாந்தை இணைப்பார்கள் என்றும், அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் அறிவித்தார்.

இதற்கு டென்மார்க் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தங்கள் கிரீன்லாந்து மக்களாகவே இருக்க விரும்புவதாக அந்நாட்டு அரசியல் கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், கிரீன்லாந்தை அமெரிக்காவின் 51வது மாகாணமாக இணைப்பது தொடர்பாக மசோதாவை குடியரசுக் கட்சி எம்பியான ராண்டி பைன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதற்கு சர்வதேச அளவில் எதிர்ப்பும் எழுந்துள்ளன.