நடிகர் ரோபோ சங்கரின் உடல்நிலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. புதிய படத்தின் படப்பிடிப்பின் போது திடீரென மயங்கி விழுந்ததால் ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் இருந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
அவரது உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். தற்போது மருந்தை உடல் ஏற்று கொண்டுள்ளதாகவும் 24 மணி நேரமும் ரோபோ சங்கர் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரோபோ சங்கரின் உடல்நிலை குறித்து வரும் பல்வேறு விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவரது மகள் இந்திரஜா சங்கர் சமூக வலைதளத்தில் ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் ”நேரம் சரியில்லை என்றால் தேவையில்லாதவர்கள் கூட தேவையில்லாமல் பேசுவார்கள் ” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வரிகள் தனது தந்தையின் உடல்நிலை குறித்த விமர்சனங்களுக்கு பதில் கருத்தாக பார்க்கப்படுகிறது.








