தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவர் தற்போது ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்று படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் த்ரிஷா, நட்டி, சுவாசிகா, யோகி பாபு,ஆர்.ஜே பாலாஜி ஆகியோ நடிக்கின்றனர். இந்த படத்தில் சாய் அபயங்கர் இசை அமைத்துள்ளார்.
மேலும் இப்படம் கருப்பு அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா தனது 46 வது படத்தில் நடித்து வருகிறார். இதை எடுத்து இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் நடிகர்
சூர்யா புதியதாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ”ழகரம்” தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படமாக ஜித்து மாதவனின் படமும் இரண்டாவது படமாக இயக்குனர் பா. இரஞ்சித்தின் படமும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. முன்னதாக நடிகர் சூர்யா 2டி என்டர்டைன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.








