இயக்குனர் மற்றும் நடிகர் என பல திறமைகள் கொண்டவர் எஸ்ஜே சூர்யா. தமிழ் சினிமாவில் சமீப காலமாக வில்லன் ரோல்களில் மிரட்டி வருகிறார்.
நீண்ட காலத்திற்கு பிறகு எஸ்ஜே சூர்யா தற்போது மீண்டும் படம் இயக்க தொடங்கி இருக்கிறார். அவர் கில்லர் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார்.
கில்லர் படத்தின் ஷூட்டிங்கில் நடந்த விபத்தில் எஸ்ஜே சூர்யா காயமடைந்துள்ளார். சண்டை காட்சி எடுத்த போது இரும்பு கம்பியில் மோதி காலில் காயம் ஏற்பட்டு இருக்கிறது.
மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு சிகிச்சை பெற்ற அவர் தற்போது ஓய்வில் இருக்கிறார். மருத்துவர்கள் கூறியதாவது, இரண்டு வாரங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும்.








