ஹரியானா மாநிலம் ரோத்தக் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரோத்தக் பகுதியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் டெல்லியிலும் உணரப்பட்டதால், மக்கள் அச்சமடைந்தனர்.








