ஹரியானாவில் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை கொண்டு இந்திய ராணுவ வீரர்கள் பங்கேற்ற ட்ரோன் பயிற்சி நடைபெற்றது. மேலும் பெண் வீராங்கனைகளுக்கும் ட்ரோன் பயிற்சி வழங்கப்பட இருப்பதாக இந்திய ராணுவத்தின் மேற்கு கட்டளையின் ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் குமார் தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்திய ராணுவத்திற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக இந்திய ராணுவத்தில் பல்லாயிரம் ட்ரோன்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதை இந்த பயிற்சி ஆதரிக்கிறது.








