ஆஸ்திரேலியா அரசு 16 வயதிற்கு கீழ் உள்ள பயனர்களுக்கான சமூக ஊடக கணக்குகளை முழுமையாகத் தடுக்கும் வகையில் முக்கியமான சட்டத்தை அறிவித்துள்ளது. இந்த புதிய சட்டம் 2025 டிசம்பர் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. உலகில் முதன்முறையாக, குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.
இந்த கட்டுப்பாட்டால் ஆஸ்திரேலியாவில் உள்ள சமூக ஊடக பிரபலங்கள் பெரும் பதட்டத்தில் உள்ளனர். உதாரணமாக, 23 பில்லியன் பார்வையாளர்கள் பின்தொடர்கின்ற YouTube சேனலை நடத்தும் ஜார்ஜன் பார்க்லே, தனது மெல்போர்ன் ஸ்டுடியோவை வெளிநாட்டிற்கு மாற்றிப் பதிவேற்றப் பரிசீலித்து வருகிறார்.
“வெளிநாடுதான் பணம் தரப்போகிறது” என்ற அவரது கவலை, இந்த சட்டத்தின் விளைவுகளை வெளிப்படுத்துகிறது. ஆஸ்திரேலிய சமூக ஊடக சந்தை வருடத்திற்கு சுமார் 9 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டும் நிலையில், இச்சட்டம் அமலுக்கு வந்தால் விளம்பரதாரர்கள், பார்வையாளர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 வயதிற்குட்பட்டவர்கள் கணக்குகளை வைத்திருந்தால் அவை முடக்கப்படும். இதனால் YouTube, TikTok போன்ற தளங்கள் தனது அல்காரிதம்கள் மூலம் பார்வையாளர்களை தக்கவைக்க முடியாமல் போகலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதற்கிடையில், 15 வயதான உணவுப் பிளாக்கர் டிமி ஹெரிக்ஸ்லிம் போன்ற இளம் கலைஞர்கள் மிகுந்த பாதிப்பை எதிர்நோக்குகின்றனர். “என் இணைப்பு (linked) கணக்கு வேலை செய்யாவிட்டால் நான் புதிய கணக்கைத் தொடங்க வேண்டியதே” என்று அவர் கூறியுள்ளார்.
இதனால் உள்ளூர் மைக்ரோ இன்ப்ளூயன்சர்கள் மட்டுமல்லாமல், குழந்தைகள், பார்வையாளர்கள், கண்டென்ட் தயாரிப்பவர்கள் அனைவரும் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரலாம். மேலும் இந்தத் தடை காரணமாக, எதிர்கால சமூக ஊடகப் பணிகள் மற்றும் அவற்றின் நீடித்த நிலைத்தன்மை குறித்த நம்பிக்கையும் கேள்விக்குறியாகலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
குழந்தைகளை மையமாகக் கொண்டு நல்ல தரமான உள்ளடக்கங்களை உருவாக்கி வந்தவர்களுக்கும் இத்தடை பெரும் இழப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.








