வரிக்குதிரைகள் கருப்பும் வெள்ளையும் கலந்த அழகான விலங்குகள். உண்மையில், அவற்றின் தோல் முழுக்க கருப்பாக இருந்தாலும் மேலே வரும் ரோமங்கள் வெள்ளை கோடுகளாக வளர்ந்து அவற்றை தனித்துவமாக காட்டுகிறது.
இந்த கோடுகள் வெறும் அழகுக்கானதல்ல; பூச்சிகள், குறிப்பாக Tsetse fly மற்றும் horse fly போன்றவை சரியாக அடையாளம் காண முடியாமல் குழப்பப்படுவதால் கடிகள் குறையும்.
கோடுகள் உடல் வெப்பத்தை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன; கருப்பு கோடுகள் சூடு அதிகமாக ஈர்க்கும், வெள்ளை கோடுகள் குறைவாக ஈர்க்கும் என்பதால், காற்றோட்டம் உருவாகி உடல் குளிர்ச்சி அடைகிறது.
கூட்டமாக ஓடும் போது, ஒவ்வொரு வரிக்குதிரையின் கோடு வடிவம் வேறுபடுவதால் வேட்டையாளர்களுக்கு அவற்றை சுலபமாக வேறுபடுத்த முடியாது.
மேலும், கோடுகள் ஒவ்வொரு வரிக்குதிரைக்கும் தனித்துவமான அடையாளமாகும், மனிதர்களின் கைரேகை மாதிரி.
வரிக்குதிரைகள் முழுக்க மனிதரிடமிருந்து பழக்கப்பட முடியாத விலங்குகள்; குதிரைகள் மற்றும் கழுதைகள் மாதிரி அவற்றை விவசாயம், போர், சுமை ஏற்ற பயன்படுத்த முடியாது.
அவை மிகவும் ஆத்திரம் மற்றும் பாதுகாப்பானவைகள். பின்னால் அடிக்கும் கிக் சிங்கத்தின் தாடையையும் உடைக்கும் அளவு சக்திவாய்ந்தது. குட்டிகள் பிறந்த உடனே ஓடும் அளவுக்கு தயாராக இருப்பது, வேட்டையாளர்களிடமிருந்து தப்பிக்க உதவுகிறது.
பிறந்த சில மணி நேரங்களில் குட்டிகள் அம்மாவின் கோடுகளை மனதில் பதித்துக்கொள்ளும், இதனால் அம்மாவை அடையாளம் காண முடியும்.
வரிக்குதிரைகள் கூட்டத்தில் சமூக அமைப்பை காக்கும் இயல்புடைய “bodyguard” மாதிரியானவை; பலவீனமானது நடுவில் நிற்கும், வலிமையானது வெளியே இருப்பது அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யும்.
அவைகளுக்கு sharp memory இருக்கிறது; ஒரு ஆபத்து ஏற்பட்ட இடத்தை பல வருடங்கள் நினைவில் வைக்கும். ஒலி சத்தம் குதிரை மாதிரி இல்லை; நாய் மற்றும் கழுதை கலந்த சத்தம் போல உள்ளது. மேலும் கூட்டத்தில் குறிப்பிட்ட நண்பர்களுடன் அதிக நேரம் செலவழிப்பது நட்பு உணர்வை காட்டும்.
வரிக்குதிரைகள் ஆப்ரிக்காவிலேயே உருவானவைகள், இந்தியா போன்ற பிற நாடுகளில் இயற்கையாக பரவவில்லை. அவை விரிந்த புல்வெளிகளை, திறந்த வெளிகளை விரும்பும், ஆனால் இந்தியாவில் காடுகள் மற்றும் மழை அதிகமான பகுதிகள் அதிகமாக இருப்பதால் இயற்கையாக இல்லை.
வரலாறு, சூழல் மற்றும் உணவு போட்டி காரணங்களாலும் இந்தியாவில் வரிக்குதிரைகள் இல்லை. வரிக்குதிரைகள் அழிவின் விளிம்புக்கு வந்துள்ளதால், அவற்றை பாதுகாப்பது மிகவும் அவசியம். மூன்று முக்கிய வகைகள் Endangered பட்டியலில் உள்ளன, இதனால் மனிதர்கள் அவற்றின் பாதுகாப்புக்கு விழிப்புணர்ச்சி கொள்ளவேண்டும்.
இதனால்தான் சர்வதேச வரிக்குதிரை தினம் (International Zebra Day) ஏற்பாடு செய்யப்பட்டது. உலகம் முழுவதும் இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் வரிக்குதிரைகள், அவற்றின் இயற்கை வாழ்விடங்கள் மற்றும் உயிரின பல்வகைமையின் (Biodiversity) முக்கியத்துவத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும்.
ஜனவரி 31 என்பது வரிக்குதிரை பாதுகாப்பு தொடர்பான அமைப்புகள் தேர்ந்தெடுத்த குறியீட்டு நாள்; ஐ.நா. அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாள் அல்ல, ஆனால் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வன உயிரின பாதுகாப்பு அமைப்புகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்த நாளை ஆரம்பித்தனர். இந்த நாள் நினைவூட்டுவது “வரிக்குதிரை வெறும் அழகான விலங்கு அல்ல; அது இயற்கை சமநிலைக்கே முக்கியம்” என்பதாகும்.
வரிக்குதிரைகள் வேட்டையாளர்களிடமிருந்து தப்பிக்கவும், உடல் வெப்பத்தை கட்டுப்படுத்தவும், சமூக பாதுகாப்பை உறுதி செய்யவும், தனித்துவ அடையாளமாகவும், அற்புதமான நட்பு உணர்வையும் வெளிப்படுத்தும் விலங்குகள். அவற்றின் அழகு மற்றும் தனித்துவத்தைப் புரிந்துகொண்டு பாதுகாப்பது உலகளாவிய கடமையாகும்.








