Home தமிழகம் மீனுக்கு விரித்த வலை — சிக்கியதை பார்த்து திகைத்த மீனவர்கள்!

மீனுக்கு விரித்த வலை — சிக்கியதை பார்த்து திகைத்த மீனவர்கள்!

கடலூரில் மீன் வலையில் 7 அடி நீள மலைப்பாம்பு சிக்கி பரபரப்பு

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ஒரு ஏரியில் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், வலையை இழுத்துக் கொண்டிருந்தபோது அதில் சுமார் 7 அடி நீளமுடைய மலைப்பாம்பு சிக்கி இருந்தது.

இதைக் கண்ட மீனவர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், மலைப்பாம்பை எச்சரிக்கையுடன் பிடித்து பாதுகாப்பாக வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Devi
தற்போதைய ட்ரெண்டிங் செய்திகள் மற்றும் பொதுமக்களுக்குப் பயனுள்ள விழிப்புணர்வு கட்டுரைகளை கொங்கு டுடே தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்.