திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பக்தர்கள் 123 கோடி ரூபாயை உண்டியல் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
சராசரியாக தினமும் சுமார் 80 ஆயிரம் பக்தர்கள் என மொத்தம் 23 லட்சத்து 15,000 பேர் தரிசனம் செய்த நிலையில் 8 லட்சத்து 94,000 பேர் முடி காணிக்கை செலுத்தியதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.








